மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “சசிகலா வருகையால் எங்களுக்கு பயமில்லை. பயம் என்றால் என்னவென்றே எங்களுக்கு தெரியாது. அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா என வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள். சசிகலா வெளியே வந்தபின் தினகரனிடம் கணக்கு கேட்பார் என்பதால் அவர்தான் பதற்றத்தில் இருக்கிறார்.
அதிமுக கட்சி கொடியை பயன்படுத்த சசிகலாவிற்கு அனுமதியில்லை, மீறி பயன்படுத்தினால் சட்டம் தன் கடமையை செய்யும். சசிகலா குடும்பத்தின் தலையீடு இல்லாமல் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்பது தான் எங்கள் நோக்கம். திமுக-வின் பி டீமாக சசிகலாவும் தினகரனும் செயல்படுகிறார்கள். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எங்களோடுதான் கடைசிவரை இருப்பார். அமைச்சர்களும், நிர்வாகிகளும், தொண்டர்ககும் ஒற்றுமையுடன் உள்ளோம். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட இயக்கம். சில புல்லுருவிகள் செயலால் எங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவது இல்லை” என்றார்.