திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் திமுக, காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமாகத் தேர்தலை சந்தித்து வருகின்றனர்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ்கட்சிக்கு மிகக் குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சி கடும் அதிருப்தி அடைந்தது. இதுதொடர்பாக காங்கிரஸ் கட்சி செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியது. அந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் கே.எஸ்.அழகிரி, உணார்ச்சி வசப்பட்டு இந்தக் கூட்டத்தில் அழுதார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி, கமலுடனும் கூட்டணி குறித்துப் பேசியதாக தகவல் வெளியானது.
தமிழகத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக சுருங்கி வருகிறது. கடந்த 1980 ஆம் ஆண்டு இந்திரா காங்கிரஸ் கட்சிக்கு கூட்டணியில் 110 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 63 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் 5 தொகுதிகள் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றது. இதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. அதில் வெறும் 8 இடத்தில் மட்டுமே காங்கிரஸ் வெற்றிபெற்றது.
இந்தத் தேர்தலில் அதில் இருந்தும் குறைந்து வெறுமனே 25 தொகுதிகளே காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபோக கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தல் தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.