தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருக்கின்றது சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையம் தேர்தல் சிறப்பாக நடத்தி முடிக்க தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றது.
அந்த வகையில் சமீபத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் மாற்றம் செய்ய விரும்பும் வாக்காளர்களுக்கு முகாம் நடத்தப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது. இந்த நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மற்றும் உதவி அதிகாரிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிவாரியாக தேர்தல் அதிகாரிகள் உதவி தேர்தல் அதிகாரிகளை நியமித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று வெளியிடுவார்என்பது குறிப்பிடத்தக்கது.