தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தொடங்கிவைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கொரோனா தடுப்பூசியை நிச்சியமாக நான் போட்டுக் கொள்வேன். இந்திய மக்கள் பாதுகாப்பாக வாழ வேண்டும் என பிரதமர் மோடி எடுத்த விடாமுயற்சி வெற்றி பெற்றிருக்கிறது. நாட்டில் உள்ள அனைவரும் தடப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்பதே நோக்கம். ஒரு மருத்துவர்தான் தமிழகத்தில் முதல் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர். உரிய பரிசோதனைக்கு பிறகே தடுப்பூசிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 166 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்த இந்த நாளே நல்ல நாளாக கருதப்படுகிறது” என்றார்.