தற்பொழுது உலகமே சோஷியல் மீடியாவின் பிடியில் தான் இயங்கிக்கொண்டு இருக்கிறது. ஒருவருக்கொருவர் முகம் பார்த்துகூட பேசமுடியாத இந்த மோசமான சூழ்நிலையில் அருகில் இருப்பவர்கள்கூட மொபைலில் தான் பேசிக் கொள்கிறார்கள்.
இந்தியாவில் சீனாவுடனான போர் மேகம் சூழ்ந்தபோது
டிக்டாக் மற்றும் ஹலோ செயலிகள் மீது நிரந்தரத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் தாய் நிறுவனமான பையிட் டான்ஸ் இந்திய ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யத் துவங்கியுள்ளது. பையிட் டான்ஸ்-ன் இந்த முடிவால் 2000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட உள்ளனர். இதில் பலருக்கும் வருகிற ஜனவரி 29ஆம் தேதி பணியில் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.