சென்னை மெரீனா கடற்கரை காமராஜர் சாலையிலுள்ள லேடி வெலிங்டன் கல்லூரியில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு 9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
பின்னர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “பல்வேறு சோதனைகளை வென்று அரசியலில் தனக்கென தனியிடம் பிடித்து சாதித்துக் காட்டியவர் ஜெயலலிதா.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஜெயலலிதா அரணாக விளங்கினார். முன்னாள் முதல்வர் ஜெயாலலிதாவின் பிறந்தநாள் விழா அரசு விழாவாக கொண்டாடப்படும். அவரது வழியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் தற்போதய அரசு அரசு அரணாக விளங்குகிறது. கடந்த நான்கு ஆண்டு ஆட்சியில் மாணவர்கள் நலனுக்காக அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.