முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2016 டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு பக்கத்தில் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நினைவிடம் அமைக்க எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு அரசாணை வெளியிட்டது. 50 ஆயிரத்து 422 சதுர அடி பரப்பளவில் பொதுப்பணி துறை மூலமாக ஜெயலலிதா நினைவிடம் அமைக்கும் பணி நடந்தது. நினைவிடம் மூன்று கட்டிடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடம், பீனிக்ஸ் பறவை தோற்றத்திற்குள் அமைந்துள்ளது.
இடது பக்கத்தில் அருங்காட்சியகம், வலது பக்கத்தில் அறிவுசார் மையம்மும் இடம் பெற்றுள்நான்” மக்களால் நான் மக்களுக்காக நான்” மற்றும் “அமைதி, வளம், வளர்ச்சி” ஆகிய, ஜெயலலிதாவின் பொன்மொழிகள் அங்கு பொறிக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்துவைத்தார். துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி-க்கள் கலந்துகொண்டனர். ஜெயலலிதா வசித்த வேதா இல்லம் நாளை பொதுமக்கள் பார்வைக்காக திறந்துவைக்கப்பட உள்ளது.