சென்னை சைதாபேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் உள்ள சுற்றுசூழல்துறை அலுவலகத்தில் பாண்டியன் என்பவர் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். அவர் மீது அளிக்கப்பட்ட லஞ்சப் புகாரைத் தொடர்ந்து, மாநில ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அவரது அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். அப்போது அதிக அளவில் கணக்கில் வராத பணம் கைபற்றப்பட்டதைத் தொடர்ந்து சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிலும் ஊழல்தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின் போது ரூபாய் 1.37 கோடி பணம், சுமார் 3 கிலோ எடையுள்ள தங்க நகைகள், சுமார் வெள்ளி பொருட்கள், வைர நகைகள், சுமார் 7 கோடி மதிப்புள்ள 18 நிலங்கள் தொடர்பான ஆவணங்கள், நிரந்தர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், கார் மற்றும் இதர பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர் நடவடிக்கையாக அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற உள்ளது