கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து இந்த தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமாரின் மறைவைத்தொடர்ந்து கன்னியாகுமரியில் இடைத்தேர்தல் வந்துள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். திருவனந்தபுரத்திலிருந்து, நாகர்கோவிலுக்கு இன்று காலையில் வந்த அமித்ஷா, சுசீந்திரம் தாணுமாலையன் சுவாமி கோவிலில் தரிசனம் செய்தார். தொடர்ந்து சுசீந்திரத்தில் 5வீடுகளுக்குச் சென்று பாஅஜகவுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து பாஜக ஆதரவு விழிப்புணர்வு நோட்டீஸையும் ஒட்டினார். தொடர்ந்து, வெற்றிக் கொடியேந்தி வெல்வோம் என்னும் பெயரில் விழிப்புணர்வு பேரணியைத் துவங்கிவைத்து பங்கேற்றார்.
தொடர்ந்து தற்போது வெற்றிகொடியேந்தி வெல்வோம் என்னும் பெயரில் தெருப் பிரச்சாரத்திலும் பங்கேற்றார். நாகர்கோவில் உடுப்பி ஹோட்டலில் நடந்துவரும் பாஜகவின் கட்சி நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துகொண்டு தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை நடத்திவருகிறார்.