பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரியில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கிவைத்தார். பொன்னர் பிரதமர் மோடி பேசுகையில், “புதுச்சேரி மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இங்கு வாழும் மக்கள் பல மொழிகளை பேசினாலும் ஒற்றுமையின் அடையாளமாக விளங்குகிறார்கள். பன்முகத்தன்மையின் அடையாளம் புதுச்சேரி மண். இங்கிருந்து பல்வேறு புரட்சியாளர்கள் வந்துள்ளனர்.
புதுச்சேரியின் புனிதத்தன்மை மீண்டும் என்னை இந்த மண்ணுக்கு அழைத்து வந்திருக்கிறது. சுகாதாரத்துறையில் முதலீடு செய்யும் நாடுகள் பிரகாசிக்கும். சுகாதாரத்துறைக்கு மத்திய அரசு பட்ஜெட்டில் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.