அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் சாத்தூர் எம்.எல்.ஏ ராஜவர்மன், டிடிவி தினகரனை சந்தித்துள்ளார்.
சாத்தூர் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருப்பவர் ராஜவர்மன். இவருக்கும் அதே விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் இடையே கடும் சண்டை இருந்துவந்தது. ஒருகட்டத்தில் அமைச்சர் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும் புகார் சொன்னார் ராஜவர்மன். இந்நிலையில் இந்தத் தேர்தலில் ராஜவர்மனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. ராஜவர்மனுக்கு சீட் கிடைக்காததற்கு ராஜேந்திரபாலஜி தான் காரணம் என குற்றம் சாட்டினார். இந்நிலையில் இன்று திடீரென எம்.எல்.ஏ ராஜவர்மன், டி.டி.வி.தினகரனை நேரில் சந்தித்தார். இதனால் அவர் அமமுக சார்பில் களம் இறங்குவார் என