சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசத்தை அனுபவித்து விட்டு பெங்களூரில் இருந்து சென்னை திரும்பி இருக்கிறார் சசிகலா. பெங்களூரிலிருந்து சென்னைக்கு 22 மணி நேரம் காரில் வந்துள்ளார். சசிகலாவின் தொண்டர்கள் கூட்டம் கூட்டமாக வழிநெடுகிலும் அவரை காண திரண்டிருந்தனர் அந்த கூட்டத்திற்கு நடுவே சசிகலாவின் காரை சாமர்த்தியமாக ஒட்டிய சசிகலாவின் கார் டிரைவர் பிரபு கவனத்தை ஈர்த்துள்ளார்.
குறிப்பாக பெங்களூரில் உள்ள ஒரு பாலத்தில் செல்லும் பொழுது இருசக்கர வாகன ஓட்டிகள் சசிகலாவின் வாகனத்தை பின்தொடர்ந்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர் அவர்களை சமாளிப்பது இதுபோல பல சவால்களை சந்தித்து சசிகலாவை சென்னை வரை அழைத்து வந்துள்ளார் இவர். பிரபு ஏற்கனவே ஜெயலலிதாவிற்கு 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார் எனவே அனுபவம் வாய்ந்தவர் என்பதால் இவரை சசிகலா நியமித்ததுள்ளார். அதிமுக கொடி விவகாரத்தில் சசிகலா காரை மாற்றினார் ஆனால் டிரைவரை மாற்றவில்லை என்பது குறிப்பித்தக்கது.