கொரோனா உலக நாடுகளில் பரவி வந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சர்வதேச விமானங்களை முழுமையாக ரத்து செய்தது. கொரோனா வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் கான்றாக்ட் அடிப்படையில் சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துள்ளதாலும், நோய்த்தொற்று பரவலின் வேகம் குறைந்துள்ளதாலும் வரும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி முதல்ல் சர்வதேச பயணிகள் விமானங்கள் முழுமையாக இயக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசிகளை உலக மக்கள் அதிகமாக எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக பயணிகளை தனிமைப்படுத்த வேழ்ண்டிய அவசியம் ஏற்படாது. எனவே, தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான சான்று வைத்திருப்பவர்களை சர்வதேச விமானங்களில் பயணிக்கலாம் என்ற அறிவிப்புடன் நூறு சதவீதம் சர்வதேச விமானங்கள் இயங்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.