தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் ஜூரம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் இருந்து இன்று முதல் தன் பிரச்சாரப் பயணத்துக்கு பிள்ளையார்சுழி போடுகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
எடப்பாடி தொகுதிக்குட்பட்ட நங்கவள்ளி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பெரியசோரகையில் உள்ள சென்றாயப் பெருமாள் கோயிலில் பூஜை செய்துவிட்டு தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் எடப்பாடி பழனிச்சாமி.