மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், “நமது நாட்டில் கொரோனா தடுப்பூசி விநியோகம் சீராக உள்ளது. ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகளின்படி உலகின் பிற நாடுகளில் புழக்கத்தில் உள்ள தடுப்பூசிகளை ஒப்பிடும்போது இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள நமது தடுப்பூசிகள் மிகக்குறைவான பக்கவிளைவுகளை ஏற்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது. ஏழை மற்றும் வளர்ச்சியடையாத நாடுகளுக்கும் கொரோனா தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் இந்தியா உலகத்துக்கே ஒரு மருந்தகமாகத் திகழ்கிறது.
62 நாடுகளுக்கு 5.52 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்களை இந்தியா வழங்கியிருக்கிறது. உலகமே மருத்துவ நெருக்கடியை சந்தித்திருக்கும் வேளையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைப்பதை உறுதி செய்வதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். கொரோனா வைரஸ் ஒழிப்பில் இந்தியா இறுதிக் கட்டத்தில் உள்ளது” என்றார்.