மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் நந்த்குமார் சிங் செளகான். பாஜக-வைச் சேர்ந்த இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் கொரோனா நோய்த் தொற்று உறுதியானது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து டில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் தீவிரமாக உடல்நிலை பாதிப்புக்குள்ளான நந்த்குமார் சிங் செளகானுக்கு செயற்கை சுவாசக் கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பலனளிக்காமல் அவர் நேற்று இரவு பலியானார். அவரது மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.