மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவுபடி கொடைக்கானல் நகரில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக கொடைக்கானல் உள்ள பல்வேறு கடைகளில் ஒரு லிட்டர், இரண்டு லிட்டர் குடிநீர் பாட்டில்கள் தற்போது தடை செய்யப்பட்டுள்ளது.ஆனால் ஐந்து லிட்டர் 10 லிட்டர் பாட்டில்கள் வைக்கப்பட்டு வருகின்றது.
ஒரு லிட்டர் மட்டும் இரண்டரை லிட்டர் குடிநீர் பாட்டில்கள் கிடைக்காததால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சி நிர்வாகம் சார்பில் நகரின் பல்வேறு இடங்களில் தண்ணீர் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால் இதுவரை அந்த இயந்திரங்கள் எதுவும் வைக்கப்படவில்லை இதனால் தண்ணீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.