கொரோனா நோய்த்தொற்று பரவல் வேகம் சற்று குறைந்திருந்த நிலையில், இப்போது குறிப்பிட்ட சில மாநிலங்களில் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு மீண்டும் இ-பாஸ் நடைமுறையை கொண்டுவந்துள்ளது.
ஆந்திரா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகியவை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்து பிற மாநிலங்கள் வழியாக தமிழகம் வருவோரும் இ-பாஸ் எடுப்பது கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
வணிக ரீதியான பயணமாக 3 நாள்களுக்கும் குறைவாக தமிழகம் வருவோருக்கு தனிமைப்படுத்துதலில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.