குமரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் அறிவிக்கப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி பாராளுமன்றத் தொகுதியில் எம்.பியாக இருந்த வசந்தகுமார் சில மாதங்களுக்கு முன்பு உடல்நலமின்மையால் இறந்துபோனார். இதனால் குமரி பாராளுமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. குமரி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த சிலதினங்களுக்கு முன்பு நாகர்கோவில் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொன்.ராதாகிருஷ்ணனுக்காக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மறைந்த எம்.பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய் வசந்த், நடிகராகவும் உள்ளார். அவர் ஏற்கனவே கட்சித்தலைமை தனக்கு வாய்ப்பளித்தால் அப்பா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்வேன் எனக் கூறியிருந்தார்.