ஜம்முவில் சாந்தி சம்மேளன் என்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கலந்துகொண்டார். அதில் அவர் பேசுகையில், ”காங்கிரஸ் கட்சி பலவீனம் அடைந்துள்ளது என்பது உண்மை. அதனால்தான் நாம் இங்கு கூடி உள்ளோம். நாம் கட்சியை பலப்படுத்த வேண்டும். விமானத்தை அனுபவம் வாய்ந்தவரால் மட்டுமே ஓட்ட முடியும். இன்ஜினில் கோளாறு ஏற்பட்டால் அவருடன் பயணிக்கும் பொறியாளர் மட்டுமே அதை சரி செய்ய முடியும். குலாம் நபி ஆசாத் அனுபவம் வாய்ந்தவர். பொறியாளர் ஆவார்.
அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் காங்கிரஸ் உண்மை நிலையை தெரிந்த தலைவர்களில் குலாம் நபி ஆசாத்தும் ஒருவர். நாடாளுமன்ற பணியில் இருந்து அவர் ஓய்வு பெற்றதை அறிந்து வருத்தம் அடைந்தோம். ஆனால், அவரது அனுபவத்தை ஏன் காங்கிரஸ் பயன்படுத்தவில்லை என்பது குறித்து தெரியவில்லை” என்றார்.