ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் வீரர்களுக்கான ஏலம் சென்னையில் இன்று நடந்து கொண்டிருக்கிறது. இதில் தென் ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மொரிஸை ஏலத்தில் எடுக்க பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்கள் இடையே கடும் போட்டி நிலவியது. இதனிடையே திடீர் திருப்பமாக கிறிஸ் மோரிஸை 16 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. கடந்த ஐபிஎல் ஏலத்தில் 10 கோடிக்கு ஏலம் போயிருந்தார் கிறிஸ் மொரிஸ். அப்போது பெங்களூரு அணி ஏலம் எடுத்திருந்தது.
ஐபிஎல் வரலாற்றில் யுவராஜ் சிங் 16 கோடிக்கு ஏலம் போய் இருந்ததுதான் அதிகபட்ச தொகையாக இருந்தது. இப்போது அதை தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டரான கிறிஸ் மொரிஸ் முந்தியிருக்கிறார். இதேபோல் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை 14.25 கோடிக்கு பெங்களூர் அணி ஏலத்தில் வாங்கியிருக்கிறது. கடந்த 14 ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் இதுவே அதிகபட்ச ஏலமாகும். கிறிஸ் மோரிஸ் வேகப்பந்து வீச்சாளராகவும், சிறந்த பேட்ஸ் மேனாகவும் ஆல்ரவுண்டராக கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.