இந்தியாவுடனான மோதல் போக்கை சீனா கடைபிடித்துவருகிறது. ஏற்கனவே நம் எல்லையில் அத்துமீறிய சீன ராணுவத்தை நம் வீரர்கள் விரட்டியடித்த சம்பவம் நடந்தது. மேலும் நம் நாட்டு எல்லையில் சீனா சில குடியிருப்புக்களை அமைத்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. இந்த நிலையில் சிக்கிம் எல்லையில் சீன ராணுவத்தினர் திடீரென ஊடுருவ முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. சீன வீரர்களின் முயற்சியை நமது ராணுவத்தினர் முறியடித்தனர். சீன வீரர்களை இந்திய வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தி விரட்டியடித்தனர்.
இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியர்கள் தரப்பிலும் சில வீரர்களுக்கு காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இப்போது அங்கு சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.