தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்-ன் 104 வது பிறந்ததின விழா கொண்டாடப்பட்டது. அ.தி.மு.க நிர்வாகிகள், அமைச்சர், தமிழக முதல்வர் என பலரும் அவரது உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி எம்.ஜி.ஆர் பிறந்த நாளை முன்னிட்டு ட்விட்டரில் தமிழில் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் ட்விட்டரில், “திரையுலகிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆர். பரவலாக மதிக்கப்பட்டார்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது, வறுமையை ஒழிக்கவும், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும் பல முயற்சிகளை மேற்கொண்டார். அவரது பிறந்தநாளில் எம்ஜிஆருக்கு எனது புகழ் வணக்கம்” என குறிப்பிட்டுள்ளார்