மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புகள் ஆதரவு கொடுத்து வருகின்றன. அதே சமயம் போராட்டத்தில் பிரிவினைவாதிகள் புகுந்துவிட்டதாக பா.ஜ.க கூறி வருகிறது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் முடிந்த கையோடு நேற்று சட்டமன்ற கூட்டத்தை கூட்டியிருக்கிறது ஆளும் சி.பி.எம் கூட்டணி.
மத்திய அரசு விவசாய சட்டத்தை திரும்பபெற வேண்டும் என்றும், விவசாயிகளிடம் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் ஒருமனதாக தீர்மானம் நிறைநிறைவேற்றப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் இந்த தீர்மானத்தை கொண்டுவந்து பேசும்போது ‘வேளாண் சட்டத்தால் விளைபொருட்கள் கார்ப்பரேட்டுகள் கைக்கு போய்விடும்’ என்றார். கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மத்திய அரசுக்கு எதிரான தீர்மானத்திற்கு பா.ஜ.க-வின் ஒரே எம்.எல்.ஏ ஓ.ராஜகோபாலும் வரவேற்றிருக்கிறார். கேரள பா.ஜ.க-வின் முதல் எம்.எல்.ஏ ஆன ஓ.ராஜகோபாலின் இந்த செயல் பா.ஜ.க தலைமையை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கி