ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாதின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது பாப் – அல் – ஷராகி மார்க்கெட். மிகவும் பரபரப்புடன் செயல்படும் இந்த மார்க்கெட்டின் இன்று இரண்டுபேர் மனித வெடிகுண்டுகளாக வந்துள்ளனர். மக்கள் கூட்டமாக நின்ற பகுதியில் சென்றவர்கள் தங்கள் உடலில் மறைத்து வைத்திருந்த குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர்.
அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் மக்கள் பதட்டத்துடன் சிதறி ஓடினர். இந்த தாக்குதலில் மனித வெடிகுண்டு உள்பட 28 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர். 73-க்கும் கூடுதலானவர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலரது உடல் நிலை மோசமான நிலையில் உள்ளதால் மரண எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.