இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 263 ரன் எடுத்ததுள்ளது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்தது.
அந்த அணியின் இரண்டு வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினாலும், கேப்டன் ஜோ ரூட் தனது நூறாவது டெஸ்டில் சதம் அடித்து அசத்தி உள்ளார். ஜோ ரூட் 128 ரன் எடுத்திருந்த நிலையில் முதல் நாள் ஆட்டம் முடிவு அடைந்தது. இந்திய அணி வீரர் பும்ரா 2 விக்கெட்டையும், அஸ்வின் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றி உள்ளார்.