சேலம் மாவட்டம் செல்லியம் பாளையத்தில் அதிமுக பூத்கமிட்டி மகளிரணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும் சேலம் மாவட்ட கழக செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு பேசுகையில், “உங்களது குடும்பத்தில் ஒருவராக இருக்கும் எனக்கு , இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த கூட்டம் போதும் வருகிற தேர்தலில் நாம் வெற்றியடைய. அதிமுகவில் மட்டுமே மகளிர் பூத் கமிட்டி உள்ளது.
நீங்கள் முழுமனதுடன் முனைப்பாக செயல்பட வேண்டும். 2016-ல் புரட்சி தலைவி ஜெயலலிதா கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் தமிழக அரசு செய்து கொடுத்துள்ளது. சொல்வதை செய்கிற அரசாக கழக அரசு திகழ்ந்து வருகிறது.
உள்ளாட்சியிலே மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு தருவதாக ஜெயலலிதா அறிவித்தார். அவர் மறைந்தாலும் அவருடைய கனவை தமிழக அரசு செய்து காட்டியுள்ளது” இவ்வாறு அவர் பேசினார்.