பாஜக – அதிமுக கூட்டணி குறித்து மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசியது அவரின் தனிப்பட்ட கருத்து என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். அதேபோல் பாஜகவை பொறுத்த வரை கூட்டணி பற்றி தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என்று கூறிய நயினார் நாகேந்திரன், அகில இந்திய தலைமை என்ன சொல்கிறதோ அதை தான் செய்வோம் என்று தெரிவித்துள்ளார்
தமிழ்நாடு பாஜகவின் மாநில நிர்வாகிகள் மற்றும் அணி தலைவர்கள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேசுகையில், தமிழ்நாட்டில் பாஜக தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதால் வரும் மே மாதம் 10ஆம் தேதி வரை கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபட்டிருப்பேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி என்று முடிவு எடுத்தால், எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். சாதாரண தொண்டனாகவே கட்சி பணிகளை செய்வேன் என்று தெரிவித்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் யாரும் தனித்து போட்டியிட்டது கிடையாது. தனித்து போட்டியிடுவோம் என அறிவிக்கவும் முடியாது. ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்து தான் ஆகவேண்டும் என்று தெரிவித்தார்.தொடர்ந்து பாஜக-வில் இருந்து விலகிய நிர்வாகிகள், நயினார் நாகேந்திரன்அதிருப்தியில் இருப்பதாக கூறியது பற்றிய கேள்விக்கு, என்னுடைய கருத்தை நான் தான் சொல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.