தமிழகத்தில் முக ஸ்டாலின் ன் முதலமைச்சர் கனவு பலிக்காது என முக அழகிரி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் எப்போதுமே முதல்வராகப் பணியாற்ற முடியாது எனவும் பேசியுள்ளார் மு.க அழகிரி.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த மு.க.அழகிரி, கடந்த 2014 மக்களவைத் தேர்தலின்போது கட்சி தலைமைக்கு எதிராக கருத்துக்களை தெரிவித்ததால் அதிரடியாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கியிருந்த மு.க.அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விரும்பினர். ஆனால் கட்சி தலைமை அவருக்கு இப்போது வரையில் அழைப்பு விடுக்கவில்லை.
இந்நிலையில், அடுத்தகட்ட அரசியல் நிலைப்பாடு குறித்து முக அழகிரி தனது ஆதரவாளர்களுடன் மதுரையில் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில்
தமிழகத்தில் முக ஸ்டாலின் எப்போதுமே முதல்வராக முடியாது என்றும்
ஸ்டாலினுக்கு பொருளாளர் பதவி வழங்கப்போகிறேன் என்றார்கள் நான் ஒப்புதல் தந்தேன்
தம்பிக்கு துணை முதல்வர் பதவி என தந்தை கூறினார் அதற்கும் நான் சரி என்று கூறி சம்மதித்தேன். யார் என்ன கூறினாலும் ஸ்டாலின் முதல்வராக முடியாது என மு.க அழகிரி கூறினார். இந்தக் கூட்டத்தில் திமுக தன்னால் அனுபவித்த பலன்களையும் மு.க.அழகிரி பட்டியலிட்டுச் சொன்னார்.