திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, போராட்டத்தில் வன்முறை சூழுமானால், அரசின் திசைதிருப்பும் அரசியலுக்கு உதவியாக அமைந்துவிடும் என்று விவசாயிகள் கண்டிப்பாக உணர வேண்டும். 2 மாதங்களுக்கும் மேலாக அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் உணர்வுகளுக்கு சிறிதும் மதிப்பளிக்காமல் மத்திய அரசு உதாசீனம் செய்து கொண்டிருக்கின்றது.
மத்திய அரசின் பின்னடைவான அணுகுமுறையின் விளைவுதான், இந்த குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் நடந்த போராட்டக் விளைவுகள். வன்முறை தவிர்க்கப்பட வேண்டும், ஜனநாயக நெறி முறைக்கு உட்பட்டு அமைதி வழியில் தீர்வு காண இருதரப்பினரும் முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.