சொத்துகுவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கடந்த நான்கு ஆண்டுகளாக சிறையில் இருந்தார் சசிகலா. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ரிலீஸ் ஆனதும் தீவிர அரசியலில் அவர் ஈடுபடபோவதாக தகவல் வெளியானது. இதனால் அவரது விடுதலை எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை செய்யப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவுப்பு வந்ததும் அ.ம.மு.க தொண்டர்கள் உற்சாகமானார்கள். இந்த நிலையில் கடந்த 18-ம் தேதி வாக்கில் சசிகலாவிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் அவருக்கு கொரோனா நோய்த்தொற்றும் ஏற்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே அறிவித்தபடி சசிகலா இன்று விடுதலை செய்யப்பட்டார். அவரைக் காண பெங்களூர் மருத்துவமனையில் அ.ம.மு.க வினர் குவிந்துள்ளனர். நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வரும் சசிகலாவுக்கு பூங்கொத்து மற்றும் பரிசுகள் வழங்கி வரவேற்க தொண்டர்கள் ஆர்வமாக அங்கு திரண்டுள்ளனர்.