கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில் பிப்ரவரி 8-ம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்தது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்லூரிகளில் வழிகாட்டுதல் நெறிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். கல்லூரிகளிலேயே கிருமிநாசினி வழங்க வேண்டும் என்றும் வழிகாட்டி நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே கல்லூரிகள் திறப்பதில் கூடுதல் கால தாமதம் ஏற்பட்டதால் பிப்ரவரி 8-ம் தேதி முதல் திறக்கப்படும் கல்லூரிகள் வாரத்திலன் ஆறு நாள்களும் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முழுவதும் கல்லூரிகள் வாரத்திற்கு 6 நாட்கள் செயல்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.