கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் உலக்அ நாடுகளுக்கு வழங்கப்பட்டுவருகின்றன.
அவசரகால தேவைக்காக இந்த இரு தடுப்பூசிகளை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்லாது இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பூடான், மாலத்தீவுகள், பிரேசில் என பல நாடுகளுக்கும் இந்தியாவின் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. அந்த வரிசையில் கனடா நாட்டுக்கும் தடுப்பூசி வழங்குகிறது மத்திய அரசு. இதைத்தொடர்ந்து கனடா நாட்டில் உள்ள இந்து அமைப்புகள் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்து கிரேட்டர் டொரண்டோ பகுதியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்தியா – கனடா நட்புறவு நீடிக்க வேண்டும் என்றும் அந்த பலகையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.