கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த முதுமலை புலிகள் காப்பகம் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
வருகிற 11-ஆம் தேதி முதல் முதுமலை புலிகள் காப்பகம் சுற்றுலா பயணிகளின் பார்வைக்காக திறக்கப்பட இருக்கிறது. யானை சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம், சுற்றுலா விடுதிகள் என அனைத்தும் திறக்கப்பட உள்ளது. அதேநேரம் 50 சதவீத சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.