கொரோனா தொற்று தமிழகத்திலும் பரவத் தொடங்கி உள்ள நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் 12 கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுவந்தது. 12வது கட்டமாக கடந்த 1ஆம் தேதி முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு வருகின்ற 31ஆம் தேதியுடன் நிறைவடைய இருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு டாக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை கூட்டம் நடத்துவது வழக்கம் .அந்த வகையில் கலெக்டர்கள் மற்றும் மருத்துவ நிபுணர் குழுவுடன் இன்று மீண்டும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்த இருக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கின்றது. முதலில் 10:30 அளவிற்கு மாவட்ட ஆட்சியர்களுடன் அவர் ஆலோசனை நடத்தியிருக்கிறார் அப்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எந்த அளவு குறைந்துள்ளது என்பதை விரிவாக கேட்டுத் தெரிந்து கொள்வார்.

இதனைத் தொடர்ந்து மருத்துவ நிபுணர்களுடன் ஆலோசனை கூட்டம் 11 மணிக்கு நடைபெற இருக்கின்றது. ஏற்கனவே மத்திய அரசு பிப்ரவரி 28ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டித்துள்ளது. தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி உட்பட்ட பல்வேறு தளங்கள் அறிவித்துள்ளது எனவே தமிழகத்திலும்கூட இதேபோல் அறிவிக்க்ச்ப்படும் என தெரியவருகிறது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து வருகின்ற நிலையில் பல்வேறு தலைப்புகள் அறிவிக்கப்பட்டு விட்டன பஸ் ரயில் போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பி இருக்கின்றது சினிமா தியேட்டர்கள் பொழுதுபோக்கு தளங்களும் திறக்கப்பட்டு விட்டன. கல்லூரிகளை பொருத்தமட்டில் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மட்டும் திறக்கப்பட்டு நடந்து வருகின்றது. பள்ளிகளைப் பொருத்த மட்டில் எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ்-2 ஆகியவை மட்டும் திறக்கப்பட்டுள்ளது.கல்லூரிகளி ல் முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டுகளில் படித்து வரும் மாணவர்களுக்கான வகுப்புகளை படிப்படியாகத் திறப்பது குறித்தும், பள்ளிகளில் பிற வகுப்புகளை படிப்படியாக திறப்பது குறித்து ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.