நடைபெற இருக்கின்ற தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கீழ்காணும் தொகுதிகளில் போட்டியிடுகின்றது. அதன் விபரம் வருமாறு,
மதுராந்தகம் ( தனி), சாத்தூர், பல்லடம், மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர் (தனி), அரியலூர்
இதுதொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘’மேற்கண்ட தொகுதிகளில், கழகத்தின் சார்பில் போட்டியிட விழைவோருக்கான நேர்காணல், 11.03.2021 வியாழக் கிழமை காலை 10.00 மணி அளவில், தலைமைக் கழக அலுவலகம் தாயகத்தில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில், ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும். ’’எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.