நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டதொடர் நடந்துவரும் நிலையில இன்று எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளை சந்திப்பதற்காக புறப்பட்டுச் சென்றனர். காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, அகாலிதளம் சார்பில் ஹர்சிம்ரத் கவுர் பாதல், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சுப்ரியா சுலே, திரிணமுல் காங்கிரஸ் சார்பில் சுகதா ராய் உள்ளிட்டோரும்.
தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா, சு.வெங்கடேசன், ரவிக்குமார், திருமாவளவன் உள்ளிட்டோரும் விவசாயிகளை சந்திக்கப்போவதாக கூறி வாகனத்தில் சென்றனர். அவர்கள் காசிப்பூர் எல்லை நோக்கிச் சென்றதால் போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயிகளை சந்தித்தால் பிரச்சனை ஏற்படலாம் எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தியதாக சொல்லப்படுகிறது. இதைத் தொடர்ந்து தமிழக எம்.பி-க்கள் செய்தியாளர்களிடம் பேசுகைய, “நங்கள் விவசாயிகளை சந்திக்காமல் இருக்க 14 தடுப்புகள் அமைத்து எங்களை தடுக்கின்றனர். விவசாயிகள் போராட்டத்தை ஒடுக்க அரசு அடக்குமுறைகளை கையாளுகிறது. இந்தியா – பாகிஸ்தான் பார்டரில் இருப்பதை போன்ற உணர்வு எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் மனிதஉரிமை மீறப்பட்டுள்ளதால் சர்வதேச சமூகம் கண்டனம் தெரிவிக்கதான் செய்யும். விவசாயிகள் பிரச்னை தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம்” என்றனர்.