திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை மார்க்கெட் அருகே அமுதம் நியாயவிலைக்கடை உள்ளது. இந்த கடை ஊழியரான சிவராமன் தினமும் 200 ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்க ஐந்து லட்சம் ரூபாயுடன் கடைக்கு வருவது வழக்கம். முதல் நாள் மதியம் வரை பரிசுத் தொகை வழங்கியவர் ‘பணம் தீர்ந்துவிட்டது’ எனக்கூறி பின்னர் பணம் வழங்கவில்லை. அதுபோல நேற்று காலையில் சிறிது நேரம் பணம் வழங்கியவர் பின்னர் ‘இன்றும் பணம் தீர்ந்துவிட்டது போர்டை வைத்துவிட்டு சென்றுவிட்டார்.
இதையடுத்து பொதுமக்கள் கூட்டுறவுத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். அதிகாரிகள் அங்கு நேரில் சென்று பார்த்தபோது கடை பூட்டிக்கிடந்துள்ளது. கடையில் இருந்த எடை மிஷின் உள்ளட்ட பொருட்களையும் காணவில்லை. மேலும் கடை ஊழியர் சிவராமன் லட்சக்கணக்கான பணத்துடன் தலைமறைவானது தெரிய வந்தது. சிவராமனை சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள் அவரை தேடி வருகின்றனர்.