திருவேற்காட்டைச் சேர்ந்தவர் ஜோதிகுமார் இவருடைய வயது 36 இவர் வீட்டில் வளர்க்கும் பூனை கருவுற்று இருந்தது. அது குட்டி போடும் நிலையில் இருப்பதை உணர்ந்த அவரும் அவரது குடும்பத்தினரும் பூனைக்கு வளைகாப்பு நடத்தி நிகழ்ச்சி நடத்த முடிவு செய்துள்ளனர்.

அதன்படி பூனைக்கு புதிய ஆடை அணிவித்து அலங்காரம் செய்து சீர்வரிசை தட்டுகள் வைத்தனர். கூடவே விதவிதமான உணவுகள் மற்றும் பூனைக்கு பிரியமான நண்டு ,மீன் ,இறால் என அனைத்து அசைவ உணவுகளும் பூனைக்கு வைத்தனர். தொடர்ந்து பூனையை நாற்காலியில் அமரவைத்து பூனையின் கால்களில் வளையல்கள் அணிவித்து வளைகாப்பு கொண்டாடினார்.