கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகம் நீலிமலை காப்புகாடு அருகே குருந்த மலை கோவில் பகுதியில் அதிகாலையில் துப்பாக்கியால் சுடும் சத்தம் எழுந்துள்ளது .இதுகுறித்து வனக்காப்பாளர் விஜயகுமார் தெரிவித்த தகவலின் பெயரில் வனச்சரக அலுவலர் ராதாகிருஷ்ணன் வனக் காப்பாளர்கள் முனுசாமி பிரவீன்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டுள்ளனர்.
அவர்கள் இரண்டு குழுவாகப் பிரிந்து கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளனர். இதில் ஒரு குழுவினர் தேக்கம்பட்டி கிட்டாம்பாளையம் ரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு ஆசாமி வனத்துறையினரை பார்த்ததும் தப்பித்துச் செல்ல முயன்றுள்ளார். உடனே வனத்துறையினர் அவரை துரத்தி சென்றனர். ஆனால் அவர் வேகமாக தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அந்தப் பகுதியில் போலீசார் தேடுதல் வேட்டை நடத்தியபோது ரோட்டோரத்தில் ரத்தம் வடிந்த நிலையில் இரண்டு சாக்கு மூட்டைகள் கிடந்துள்ளது. அவற்றை வனத்துறையினர் பிரித்து பார்த்தபோது சாக்கு மூட்டைக்குள் 5 மற்றும் மூன்று வயது மதிக்கத்தக்க இரண்டு புள்ளி மான்கள் இறந்த நிலையில் கடந்ததாகவும் அவை துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து அந்த புள்ளி மான்களின் உடல் மீட்கப்பட்டு சமயபுரத்தில் உள்ள குடியிருப்பு அருகே கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் தேக்கம்பட்டி உதவி கால்நடை மருத்துவர் கவிதா முன்னிலையில் இறந்த மான்களில் உடல்பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது புலிகளின் கழுத்து மற்றும் மார்பு பகுதிகளில் துப்பாக்கி குண்டு பாய்ந்த காயங்கள் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. பிரேத பரிசோதனைக்கு பிறகு மான்களின் உடல் அங்கேயே புதைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய அந்த ஆசாமியை வனத்துறையினர் வலைவீசி தீவிரமாக தேடி வருகின்றனர்