தமிழ்நாட்டில் 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வை ரத்து செய்து அனைவரும் ஆல் பாஸ் என அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் புதுவையிலும் மாணவர்களை ஆல்பாஸ் செய்து அறிவித்துள்ளர் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன். புதுவை யூனியன் பிரதேசத்தின் அனைத்துப் பிராந்தியங்களிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 11-ம் வரையிலான வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவா்களும் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுவதாகவும்.
தமிழகக் கல்வி வாரியத்தின் வழிகாட்டுதல்படி, அந்த வாரியத்தின் கீழ் பயிலும் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களை சோ்ந்த பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மாணவா்கள் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுகிறது.
மாஹீ, ஏனாம் பிராந்தியங்களை சோ்ந்த 10 மற்றும் 11-ம் வகுப்பு மாணவா்கள் கேரளம், ஆந்திர பிரதேச கல்வி வாரியங்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் தோ்ச்சி பெற்றவா்களாக அறிவிக்கப்படுகிறது. தற்போது வாரத்தில் 6 நாள்கள் நடைபெறும் பள்ளி வகுப்புகள் 5 நாள்களாக குறைக்கப்பட்டுள்ளன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளிக்கப்படுகிறது. பள்ளிகள் மாா்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே இயங்கும். கோடை விடுமுறை ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொடங்கும் என புதுவை துணை நிலை ஆளுநரின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.