கனடாவிற்கு வரும் பயணிகள் ஹோட்டல்களில் மூன்று நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அதன் பின்னர் அவர்கள் சொந்த செலவில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ தெரிவித்துள்ளார்.

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கனடா அரசு அறிவித்து வருகிறது. இது தொடர்பாக அந்த நாட்டினுடைய பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ செய்தியாளர்களை சந்தித்து கூறும்போது கனடாவிற்கு வரும் பயணிகள் மூன்று நாட்கள் வரை ஹோட்டலில் தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கடுமையான மேற்பார்வையின் கீழ் இருப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார் அதன் பின் அவர்கள் கொரோனா பரிசோதனை தங்கள் சொந்த செலவில் செய்து கொள்ள வேண்டும்
சோதனையின்போது எதிர்மறையாக வந்தால் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் அடுத்த பத்து நாட்கள் தனிமைப்படுத்தபடுவார்கள் அதன்பின்னர் நேர்மறையான முடிவு வந்தால் அவர்கள் அரசாங்கம் தனிமைப்படுத்தும் இடத்திற்கு மாற்றப்படுவார்கள். அதேபோல் மெக்ஸிகோ, கரீபியன் நாடுகளுடனான விமான போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது விட்டதாகவும் கனடா அரசு தெரிவித்துள்ளது.