விரும்பினால் வந்தால் போதும் என்பதால் மாணவர்கள் குஷி
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் பள்ளி கல்வித்துறை பெற்றோருடன் கருத்து கேட்கும் கூட்டத்தை நடத்தியுள்ளது. கூட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை நேரடி வகுப்புக்கு அனுப்ப விருப்பம் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் மாணவர்கள் கீழ்காணும் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று இந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தகுந்த இடைவெளி விட்டு அமரவேண்டும் ஒரு வகுப்பில் 25 மாணவர்கள் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். அதற்கும் அதிகமான எண்ணிக்கை இருந்தால் அவர்கள் இரண்டு குழுவாக பிரிக்கப்பட்டு அமர்த்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்றோர்களின் எழுத்துப்பூர்வமான அனுமதி கிடைத்த பின்னரே மாணவர்களை பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டும் மேலும் பெற்றோர்களின் சம்மதத்துடன் மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு மூலம் கற்றுக்கொள்ளலாம். மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக்கூடாது. தனியார் பள்ளிகளில் அரசின் உத்தரவுப்படி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி பெற்ற பின்னரே பள்ளிகளை திறக்க வேண்டும். ஆசிரியர்கள் மாணவர்கள் பள்ளிகளில் பணிபுரியும் அனைவரும் பள்ளிக்கு உள்ளேயும் வெளியேயும் கட்டாயமாக முகக் கவசம் மற்றும் கிருமிநாசினி போன்றவற்றை பின்பற்ற வேண்டும். என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் பள்ளிகள் திறக்க உள்ளதால் மாணவர்களுக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தாலும் பெற்றோர்கள் அனுமதி இல்லை என்றால் மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்ற உத்தரவு தற்போது மாணவர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.