மத்திய நிதி அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்தார். சுகாதாரத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக பட்ஜெட்டில் அறிவித்தார். மேலும் வுவசாயிகளுக்கான திட்டங்கள், தமிழகத்தில் இருந்து கேரளத்திற்கு நவீன சாலைத் திட்டம் உள்ளிட்டவைகளை அறிவித்தார் நிர்மலா சீத்தாராமன்.
இந்த பட்ஜெட் குறித்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், “இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டின் வளர்ச்சிக்கானது அல்ல. நாட்டை விற்பதற்கான பட்ஜெட் இது. ரயில்வே, ஏர் இந்தியா, பாரத் பெட்ரோலியம் உள்ளிட்டவை ஏர்கனவே விற்கப்பட்டுவிட்டன. இந்த பட்ஜெட் மூலம் எரிவாயு நிறுவனம், சாலைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் நாட்டை விற்பதற்கானது” என்றார்