நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டதொடரில் மத்திய உள்துறை அமைச்சகம் நாடு முழுவதும் நக்சல்களால் கொல்லப்பட்ட பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை குறித்தும். பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட நக்சல்களின் எண்ணிக்கை குறித்தும் எழுத்துபூர்வமாக அறிக்கை சமர்பித்துள்ளது.
அந்த அறிக்கையில், 2020-ல் நாடு முழுவதும் நக்சல்கள் 665 தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். அதில் 140 பொதுமக்கள், 43 பாதுகாப்புப் படையினரும் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 103 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் நடத்தப்பட்ட 315 தாக்குதல்களில் 75 பொதுமக்களும், 36 பாதுகாப்புப் படையினரும் மற்றும் 44 நக்சல்களும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது