நடிகை குஷ்பு பாஜக-வில் இணைந்ததை தொடர்ந்து நடக்கும் சட்டசபை தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என பேசப்பட்டது. குஷ்புவும் அதற்கு தோதாக அந்த தொகுதியை சுற்றிச்சுற்றி வந்தார். இந்த நிலையில் வேட்பாளர் பட்டியலில் குஷ்பு இல்லை.
சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி தொகுதியும் பாமக-வுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் குஷ்பு அளித்த பேட்டியில், “தொடக்கத்தில் இருந்தே எனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளைத்தான் செய்தேன். எனக்கு சீட் கொடுப்பார்கள், நான் தேர்தலில் நிற்பேன் என்றும் ஒப்புதலோடு பாஜக-வுக்கு வரவில்லை. கட்சியின் மீது இருக்கும் நம்பிக்கையில்தான் வந்தேன். இந்த தேர்தலில் பாஜக-வுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக அசாம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்குச் செல்வேன்” என்றார்.