மேற்கு தாம்பரம் சி டி ஓ காலனியில் உள்ள ஸ்ரீ சாய் நகர் இரண்டாவது பிரதான சாலையில் வசித்து வருபவர் ரவி.இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த பொங்கல் பண்டிகையை ஒட்டி 10 தினங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் சொந்த ஊருக்கு சென்று உள்ளார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அக்கம்பக்கத்தினர் மற்றும் வீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் .அப்போது வீட்டில் உள்ள அனைத்து கதவுகளும் உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனையடுத்து உரிமையாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

நேற்று காலை திரும்பி வந்து பார்த்தபோது பீரோவில் இருந்த நான்கு பவுன் நகை 300 கிராம் வெள்ளி, எல்சிடி டிவி, லேப்டாப், அரிசி, மளிகை சாமான்கள், பித்தளை பொருட்கள் என அனைத்து விலையுயர்ந்த பொருட்களையும் அந்த கயவர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தாம்பரம் போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி மூலம் கயவர்கள் யார்? எந்த பக்கம் தப்பிச் சென்றனர் என்பதை விசாரணை நடத்தி வருகின்றனர்.