தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று சென்னை ராஜீவ்காந்தி மதுத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “முன்களப் பணியாளர்களுக்கு நம்பிக்கையூட்ட மருத்துவர் என்ற அடிப்படையில் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். தமிழகத்திற்கு மேலும் 1,69,920 கோவேக்சின் டோஸ்கள் இன்று வர இருக்கிறது. இதுவரை 907 பேர் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.
நான் 908-வது நபர். தடுப்பூசியைப் பற்றி வதந்திகள் பரப்பப்படுவதால் அதை போட்டுக்கொள்வதில் தயக்கம் உள்ளது. அப்படி தயக்கம் இருக்கக் கூடாது என்பதற்காகவே மருத்துவ முன்னோடிகள் தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்” என்றார்.