தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.
நடிகர் தனுஷ் நடிகராக மட்டுமின்றி பின்னணிப் பாடகர், தயாரிப்பாளர் என அவரது கவனத்தை சினிமாவின் பலதுறைகளிலும் செலுத்தி வருகிறார்.தற்போது நடிகர் தனுஷ் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் “ஜகமே தந்திரம்” என்கிற திரைப்படத்தை நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்திலிருந்து ஆடியோ வெளியிடப்பட்ட இரண்டு பாடல்களும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த திரைப்படம் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது .
அதேநேரத்தில் பரியேறும்பெருமாள் திரைப்படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் “கர்ணன்” என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் நடிகர் தனுஷ். இந்த படமும் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்துவிட்டது. மார்ச் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.”அசுரன்
கர்ணன்” திரைப்படத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன்,ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். தற்போது இந்த படத்திற்கு சிவாஜி நலப்பேரவை எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இதுகுறித்து அந்த அமைப்பினர் வெளியிட்ட அறிக்கையில் “கர்ணன்” என்றாலே சிவாஜி நடித்த “கர்ணன்” படம் தான் நினைவுக்கு வரும். சட்டப்படி ஒரு படத்தின் உரிமையை பெற்று மற்றொரு படத்திற்கும் வைப்பது நியாயம் என்றாலும் இதை தவிர்ப்பது நல்லது தான். “கர்ணன்” என்றாலே கொடுப்பவன் ஆனால் உங்கள் படத்தில் உரிமைக்காக போராடும் ஒருவன் எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரு சமூகத்திற்கு “கர்ணன்”என பெயர் வைப்பது ஏற்றதல்.ல இது சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி மகாபாரத்தை நேசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதையும் புண்படுத்தும் எனவே இந்தப் படத்தினுடைய தலைப்பை மாற்றும்படி கோரிக்கை வைக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்