நிகழாண்டில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதித்துள்ள அரசு, அதுதொடர்பாக வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் அரசு கூறியிருப்பதாவது,
மாடுபிடி வீரர்கள் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் 300 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ள வேண்டும். திறந்த வெளி, சமூக இடைவெளியுடன் 50 சதவிகிதத்துக்கு மேல் பார்வையாளர்கள் கலந்துகொள்ளக் கூடாது. பார்வையாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யவேண்டும். மாடுபிடிவீரர்கள் கரோனா பரிசோதன்சைக்குப் பின்னே அனுமதிக்கப்படுவார்கள். பார்வையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணியவேண்டும், ஒரு காளையுடன் உரிமையாளர், உதவியாளர் மட்டுமே வரவேண்டும். அவர்களும் கரோனா நோய்த்தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று இருக்கவேண்டும். இந்த நடைமுறையை மீறுவோர் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார். நிகழ்ச்சியை மேற்பார்வை செய்வோரும் தொற்று இல்லை என சான்று வாங்க வேண்டியது கட்டாயம்.